2012-12-08

உன்னை தேடி ....

தொலை தூரத்தில் 
உன் குரல் 
தொலைபேசியில் 
கேட்கையில் தொலைந்து 
போகிறது மனது திசை 
அறியாமலே 
உன்னை தேடி ...


உயிரோடு............

உள்ளுக்குள்
நீ
இருப்பதால் ……….
தான்
உயிரோடு
நான்
இருக்கிறேன்


முதல் காதல் ............

முதல் காதல் 
மறப்பதும் இல்லை 
மறுக்கப்படுவதும் இல்லை 
மறந்துவிட்டேன் 
என்பவர்களெல்லாம் 
மகா நடிகர்கள் ......


பிரிவு .............

மரணம் என்பது 
ஒரு நொடியில் உயிர் போகும் 
ஆனால் பிரிவு என்பது
ஒவ்வொரு நொடியும் உயிர் போகும்.....!