2012-12-08

உன்னை தேடி ....

தொலை தூரத்தில் 
உன் குரல் 
தொலைபேசியில் 
கேட்கையில் தொலைந்து 
போகிறது மனது திசை 
அறியாமலே 
உன்னை தேடி ...


உயிரோடு............

உள்ளுக்குள்
நீ
இருப்பதால் ……….
தான்
உயிரோடு
நான்
இருக்கிறேன்


முதல் காதல் ............

முதல் காதல் 
மறப்பதும் இல்லை 
மறுக்கப்படுவதும் இல்லை 
மறந்துவிட்டேன் 
என்பவர்களெல்லாம் 
மகா நடிகர்கள் ......


பிரிவு .............

மரணம் என்பது 
ஒரு நொடியில் உயிர் போகும் 
ஆனால் பிரிவு என்பது
ஒவ்வொரு நொடியும் உயிர் போகும்.....!


2012-11-06

ஒரு நிமிடம்...........



நிமிடத்தில் என்னை விட்டு
பிரிந்த நீ
ஒரு நிமிடம்
கூட பிரிந்ததில்லை
என் இதயத்தை விட்டு.... ♥ ♥ ♥


உன் நினைவுகளின் வாசம்...........

மலர் போல உன்னை நினைத்திருந்தேன் 
அதனால் தானோ என்னவோ
நீ என்னை விட்டு பிரிந்த பின்னும்
இன்னும் பிரியாமல் என்னுடனே இருக்கின்றது 
உன் நினைவுகளின் வாசம் !!!


என்னவனின் அன்புக்காக....

ஆயிரம் தோல்விகள்
ஆயிரம் ஆயிரம் வலிகள்
இருந்தாலும்
நான் நானகவே
பிறக்க விரும்புகிறேன்
என்னவனின் அன்புக்காக.......!!!


என் இதயம்.....



இமைக்கும் என் கண்கள் 
உன்னை பார்க்காமல் இருக்கும்.!
ஆனால் துடிக்கும் என் இதயம் 
உன்னை பற்றி நினைக்க மறுப்பதில்லை..!!


2012-10-15

என்னுயிரில்..........

என்னுயிரில்
கலந்த 
உன்னை
கவிதைகளாக
வரைந்து 
கண்ணீரில் 
கரைக்கிறேன்
யாருக்கும் 
தெரியாமல் ....!!!!!!

என்னை பிரிந்து 
செல்ல நினைக்காதே...... !!
நானில்லாமல் நீயிருப்பாய்......... !!
ஆனால்
நீயில்லாமல் நானிருக்க மாட்டேன்....!!!


2012-09-07

என்னுள்....



புத்தகத்திற்கிடையில்
பதுக்கி வைக்கும்
மயிலிறகைப் போல............ 
நானும் உன் நினைவுகளை 
பதுக்கியே வைத்திருந்தேன் 
என்னுள்...........................


2012-04-22

திருமண வாழ்க்கை ....

காதலில் அதிகம் பேசும் மொழி "மௌனம்"
அந்த மௌனத்திலும்
சில நேரம் "பிரிவு" என்ற புயல் வீசலாம் ..
அந்த புயலையும் தாண்டிச்செல்லும்
உண்மையான காதல்..
திருமண வாழ்க்கை என்ற இன்பத்தில்..


மாயம்...

எங்கே இருந்தாலும்
உன்னை கண்டால் மட்டும் 
திரும்பிப்பார்க்கிறேன்
காதலில் இதுவுமொரு மாயம்தான்..
உன்னை பார்க்கும் அந்த ஒரு நொடிப்பொழுது என் வாழ்வில் 
பல யுகங்களாக தோன்றுவதும் 
மாயத்திலும் மாயம்...


உன் பார்வையால்......

உன்மேல் உள்ள காதலை
சொல்ல வார்த்தைகள் இருந்தும்
மௌனத்தில் தவிக்கிறேன்...
சொல்ல வரும் போதெல்லாம்
ஊமையாகிப்போகிறேன் உன் பார்வையால்


2012-04-20

உன் பார்வை..............

துளித்துளியாய் 
உன்நினைவுகள்! 
பனித்துளியாய்
என்னுள்ளே உறைந்து 
பனிப்போர் புரிகின்றது 
உன் பார்வை வரம் வேண்டி!.......


விரும்புகிறேன்.............

விரும்புகிறேன் என... 
சொல்லிடத்தான் 
விருப்பம்...கண்கள்
உன்னை காணாத போது...
கண்டபொழுதெல்லாம்.. 
வார்த்தைகள் உதட்டில்
ஒட்டிக் கொள்கின்றன...


உன் நினைவு....




என் இதயத்தை மட்டுமல்ல 
என் கனவுகளையும் ,
கற்பனைகளையும் கூட 
நிரப்பிக் கொண்டிருக்கிறது 
உன் நினைவு....


என்னருகில்..........



கண்களுக்கு அருகில் இமைகள் இருந்தாலும் 
கண்களால் இமைகளை பார்க்க முடிவதில்லை 
இருந்தும் கண்கள் இமைகளை வெறுப்பது இல்லை 
என்னருகில் நீ இருந்தும் 
என்னால் உன்னுடன் பேச முடியவில்லை 
இருந்தும் உன்னை என்னால் வெறுக்கவும் முடியாது 
மறக்கவும் முடியாது !!!


2012-03-13

உனக்காக ........



நீ 
வந்தபின் 
உன்னுடன் பேசியதைவிட 
உனக்காக 
காத்திருக்கும் போது 
உன்னுடன் பேசியதுதான் 
அதிகம்!


நம் இதயங்கள் ........

நம் இதயங்கள் சந்தித்த அந்த 
இரு வினாடியும்
இசைகள் எல்லாம் தோற்று விட்டன
அவ்வளவு இனிமையான கணங்கள்
அதை சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லையடா...


பேனா........

உன் நினைவுகளை எழுதுவதற்காக 
பேனாவை எடுத்தேன் 
பேனாகூட நழுவியது 
உன்னைப் போலவே...


என் விழிகள்....


உன் நினைவோடு வாழும் நான்
இந்த உலகை விட்டு மறையும் நேரத்தில்
என் இறுதி சுவாசக் காற்றை நான் சுவாசிக்கும் வேளை
உன்னை நினைத்துகொண்டே
இறுதி சுவாசைக் காற்றை உள்ளெடுக்கும்
என் உடல்
இறுதி கண்ணீர் துளியை
உனக்காகவே சிந்தும் என் விழிகள்

இறுதி துடிப்பை துடித்து தன் துடிப்பை
நிறுதிகொள்ளும் வேளையில்
இந்த இறுதி துடிப்பில் கூட
உன் பெயரை உச்சரித்திடும் என் இதயம்

பார்வை இழக்கும் நேரத்தில் கூட
உன் முகத்தை தேடிடும் என் விழிகள்.


2012-03-09

உன்னோடு.....



                                                        உன்னோடு நான் இருந்த 
நிமிடங்களை கடிகாரம் 
திரும்ப திரும்ப காட்டுகையில் 
மறக்க முடியவில்லை 
உன்னையும் நீ விட்ட சென்ற 
என் காதலையும் .............


என் காதல் ....




உன்னை மறக்க நான் நினைப்பதில்லை
என்னை மரணம் வந்து அழைக்கும் வரைக்கும் 
நீ தந்த காயங்களோடு உன் நினைவுகளை சுமந்த படி 
என் காதல் என்றும் வாழும்.....


என் கல்லறை மீது...




என் கல்லறை மீது..
உனக்காக நான் எழுதிய காதல்.. 
கவிதைகளாய் விழுந்து கிடக்கட்டும்.! 
அப்போதாவது தெரிந்துகொள்.. 
நான் இறந்த பின்னும் 
உன் மீது நான் கொண்ட காதல்
வாழ்ந்து கொண்டு தான் இருக்கும் என்று..!!


2012-03-05

எப்போதும்....



நீ இருக்கும் இடத்தில் நான் இல்லை என்றாலும்
உன் நினைவில் நானும் என் நினைவில் நீயும்
நம் நினைவில் நம் காதலும் 
விடை கிடைக்கா வாழ்க்கையின் விம்பங்களாக தொடரட்டும் எப்போதும்....