2011-10-29

நான் உன்னை .....

நான் உன்னை தொலைத்து விட்டேனே
என்று ஒவ்வொரு நொடியும்
வேதனையுடன் தேடி தேடி வந்தேன் ..
ஆனால் உன்னோடு பேசிய
வார்த்தைகளை நினைத்து
சந்தோசம் கொள்கிறேன்.....

உன் ......

உன் நினைவுகளுடன்
கலந்த என்
கண்ணீர் துளிகள் - இன்றும்
நீ எனக்கு அனுப்பிய
உன் நினைவுப்பொருட்களுக்கே
சமர்ப்பணம்...

நீ விலகி .......

நீ விலகி சென்றாலும்
உன் நினைவுகளை
என்னிடம் பத்திரமாக
ஒப்படைத்து விட்டு செல்கிறாய் ,
நீ வரும் வரை
தனியே காத்துக்கிடக்கறேன்
நானும் ,
புதையலாக்கப்பட்ட
உன் நினைவுகளும் . . . !!!

தூக்கதிலாவது....

தூக்கதிலாவது
உன்னை மறக்கலாமென
நினைத்து
கண்மூடி தூங்கி
தூங்குவதாய் நினைக்க மட்டுமே
முடிந்த என்னால்
உன்னை மறக்க ஏனோ முடியவில்லை
தோற்று கொண்டிருக்கிறேன் தினமும்...
நினைவே உனக்கு மறதி
வரும் காலம் எப்போது.............

என் காதலை.....

என் காதலை
நீ மறுத்தாலும்
என்னை
நீ வெறுத்தாலும்
என் கனவை
... ...நீ புதைத்தாலும்
என் உயிரை
நீ எரித்தாலும்
என் காதல்
என்றும் உன்னோடுதான்
உன் உயிரோடுதான்

உன் வழித்தடங்களில்
வாழ்ந்திருப்பேன்
நீ போன பின்பும்......

யுக யுகமாய்.........

யுக யுகமாய் மழையிழந்த
பாலைவனம் போலவும்,
ஒரு ரோஜாச் செடியின்
... ஒற்றைப் பூவுக்காய்
வருடங்களாய்க் காத்திருக்கும்
தோட்டக்காரன் போலவும்,

காத்திருக்கிறேன்!! ♥ ♥

உலக.....

உலக மக்களின்
கண்களுக்கு
எட்டாத அதிசயம்
எதுவென்று
நான் சொல்லவா?
உள்ளத்திற்குள்
இருக்கும் நீ!!!!

கண்ணீரை.....

கண்ணீரைகூட இன்பமாய்
ஏற்றேன்
அவை நீ பரிசாக
கொடுத்துச்சென்றவை
என்பதனால்....!

உன் நினைவுகளால்......

உன் நினைவுகளால்
என் இதயம் நிறைந்த
அந்த அழகான நாட்களை
கவிதையாக எழுதிட
இன்னமும் வார்த்தைகளை
... தேடிக் கொண்டிருக்கிறேன்
வழிந்தோடும் என் கண்ணீருடன்..
நம் நினைவுகளை
கடந்து வந்த
அந்த வசந்த நாட்களை
நான் மறக்கவில்லை
மறக்கவும் முயல்வதில்லை.....!

என்.....

என் இதயத்தை
திருடியது நீ
அதற்காக தனிமை
சிறையில் தண்டனை
பெறுவது நானா ???

யார் வேண்டு.......

யார் வேண்டுமானாலும்
இருக்கட்டும்.....
உன் இதயத்தில்
"காதலியாக "
"மணைவியாக "
ஏன் கடவுளாக கூட ..
ஆனால் நான் மட்டும்
உன் உயிர் துடிப்பாக ....!!!!

உணர்வுகள்......

உணர்வுகள் இருக்கும்வரை
உயிர் கொண்ட காதல்
உடலைவிட்டு நீங்குவதில்லை ,
நான் உன்னை விட்டு
பிரிவதுமில்லை !!!

அன்பே...

அன்பே...
உன்னை நினைத்து

நான் மட்டுமல்ல,
என் கனவுகளும் கூட

உயிர் சிந்துகின்றன...! ..
உன்னால்

என் வாழ்க்கைக்கு
மட்டுமல்ல,

என் நினைவுகளுக்கும்
இது இலையுதிர் காலம் தான்...!

உன்னை தேடி......

உன்னை தேடி நான் வந்தேன்
வரும் வழில் தாகம் எடுத்தது .... .

நான் வந்த பாதையில்
கானல் நீர் ....

தாகம் தீர்க்க அருகில் சென்றேன்
கானல் நீரால் என் தாகத்தை
தீர்க்க முடியாது .....

உன்னிடம் சொல்லாத என்
காதலும் என் கைகளில்

சேராதது என்பதை பின்
தான் உணர்ந்தேன் .....

எல்லோரும் ....

எல்லோரும் சொல்லும் போது
காதலில் பிரிவை அறிந்ததில்லை...........

உன்னைப் பிரிந்த பின்பு.....
அறிந்து கொண்டேன்....

பிரிவின் வலியை..........

நீ என்னை .....

நீ என்னை விட்டு பிரிந்து
சென்ற போதினிலும்
என் இறுதி மூச்சு வரை
கலந்திருக்கும்...
நீ தந்த முத்தத்தின் சத்தம்!.

"நீ" என்ற.....

"நீ" என்ற ஓரெழுத்தும்,
"நான்" என்ற ஈரெழுத்தும் சேர்ந்து,
"காதல்" என்ற மூவெழுத்தில்,
சந்தித்தோம், இதில்
"மரணம்" என்ற நான்கெழுத்தில்.
பிரிவோமா? இல்லையேல்
"திருமணம்" என்ற ஐந்தெழுத்தில்
இணைவோமா?

அழகும் நிறமும்...

அழகும் நிறமும்
கண்களைக் கவரும்.
ஆனால்...
புன்னகை மட்டுமே
"இதயத்தை" கவரும்...

நீ தொலைவாக....

நீ தொலைவாக இருந்தாலும்
உன் நினைவுகளை........நான்
என்னை விட்டுத் தொலைத்து
விடமாட்டேன் என் அருகிலேயே
வைத்துக்கொள்வேன்.....!!!
உன் நினைவுகளை .................!

என் இதயத்தை......

என் இதயத்தை திருடியது நீ
அதற்காக தனிமை- சிறையில்
தண்டனை பெறுவது
நானா........ ???

விழிகளும் சுமை...


விழிகளும் சுமை தான்
மனதிற்கு பிடித்தவர்களை
காண முடியாத போது...!!!

பிரிவு என்பது....

பிரிவு என்பது என்னை விட்டு
நீ பிரிந்து சென்றாயே தவிர ......
என் இதயத்தில் வாழும்
உன் நினைவுகளுக்கு அல்ல ......
என் காதலுக்கும் அல்ல !!

2011-10-24

உன்னை நான் ...........


எப்போ காதலித்தேன்
எதற்காய் காதலித்தேன்
எந்தஉன்னை நான்
நிமிடம் காதலித்தேன்
என்று .......இன்னும் கூட
எனக்கு எதுவுமே தெரியாது.
ஆனால் காதலித்தேன்
இதுதான் உண்மை ....!!!


பிரிவு .....


பிரிவு என்பது என்னை விட்டு
நீ பிரிந்து சென்றாயே தவிர ......
என் இதயத்தில் வாழும்
உன் நினைவுகளுக்கு அல்ல ......
என் காதலுக்கும் அல்ல !!

I MISS YOU .....


ஜ மிஸ் யு .........
பிரிவை நான் தாங்கிக்கொண்டிருப்பதன்
காரணம் -நீயும் அதையெண்ணி வருந்துகிறாய்
என்கிற நம்பிக்கையில் தான் I MISS YOU ........