2012-02-13

நீ சுவாசிக்கவேண்டும் என்பதற்காக...

நீ
மறந்துபோனதும்,
நான்
இறந்துபோனேன்..!
இன்னும்-
என்னிதயம்
துடித்துக்கொண்டிருக்கிறது..
நீ,
சுவாசிக்கவேண்டும் என்பதற்காக..!...


உனக்காகவே காத்திருக்கின்றேன்..

உனக்காகவே காத்திருக்கின்றேன் 
வர மறுக்கின்றாய்
நீ வரும் போது 
ஒரு வேளை நான் 
உனக்காக காத்திருக்க முடியாமல் போகலாம் 
அன்று எனக்காக நீ ஒரு நொடியேனும் காத்திருக்காதே ஏனெனில் இறந்தவர்கள் மீண்டும் வருவதில்லை...


முதல் காதல்.....

முதல் காதல்....!!!!! 
அன்றொரு அந்திப் பொழுதில்... 
அருகில் நீ.. 

அசைவற்றிருந்த என் நா.. 
மௌனத்தில் பல மொழிகள் பேசியது..

சிறிது தூர நடைப்பயணம்...
சில்லென்ற காற்றில்... 
சுவர்க்கம் இதுவென்று... 
அன்று உணர்த்தியது... 

இதயத்தின் துடிப்பு.. 
அன்று மட்டும் ... 
அதிகமாய் இருந்ததால்... 
சில வார்த்தை பரிமாற்றங்கள் மட்டுமே..

ஒன்றும் அறியா..
குழந்தைகள் சந்திப்பது போல்.. 
அன்று நம் சந்திப்பு... 

காலம் நம் காதலில் கரைந்தது... 
அன்று உணர்த்தியது... 

முதல் காதல்.. 
முதல் சந்திப்பு... 
இப்படித்தான் என்று....!


உன் அழகான கண்கள்........

நீ! 
என்னை மௌனமாய் கடந்து
சென்ற போதும்..!

எனக்கு ஆறுதலாய் ஓரிரு வார்த்தை
பேசிவிட்டு தான் செல்கிறது.,

உன் அழகான "கண்கள்"


2012-02-06

காதல்.....

கண்கள் …
பார்வையை திருடின !!!
உதடுகள் …
புன்னகையை திருடின ! !!
எண்ணம் …
வார்த்தைகளை திருடின !!!
கவிதைகள் …
மொழியை திருடின !!!
அன்பே !!!
என்னை நீயும் …
உன்னை நானும் …
திருடிக் கொண்டோம் !!!
நம் இதயங்களை
திருடியது …
காதல் !!!!


உன் நினைவில் நான்.....

அன்பே.....

உன்னை மறக்கவும் முடியவில்லை ...
நினைக்காமல் இருக்கவும் முடியவில்லை...

அன்பு வைத்த உன்னை
வெறுக்கவும் தெரியவில்லை...

கண்களை மூடினால் கனவிலும்
கண்களை திறந்தாள் கண் எதிரிலும்
உன் பூமுகம் தான்...

உன்னை நினைக்க தெரிந்த
எனக்கு உன்னை வெறுக்க
தெரியவில்லை...

என்னை நீ எவ்வளவு வெறுத்தாலும்
அதைவிட பலமடங்கு உன்னை நான்
நேசிப்பேன்.....

உன் நினைவில் நான்...


விழி மோதிய......

விழி மோதிய ஒரு நொடியில் 
விடை கண்ட ஒரு பொழுது காதல் !!


உன் பார்வை......

உன் பார்வை இருக்கிறதே ..... 
அந்த பார்வைக்காகவே நான் பல ஜென்மம் எடுப்பேன் 
தொலைந்த என்னை தேடுவதற்கு.