2012-02-13
முதல் காதல்.....
முதல் காதல்....!!!!!
அன்றொரு அந்திப் பொழுதில்...
அருகில் நீ..
அசைவற்றிருந்த என் நா..
மௌனத்தில் பல மொழிகள் பேசியது..
சிறிது தூர நடைப்பயணம்...
சில்லென்ற காற்றில்...
சுவர்க்கம் இதுவென்று...
அன்று உணர்த்தியது...
இதயத்தின் துடிப்பு..
அன்று மட்டும் ...
அதிகமாய் இருந்ததால்...
சில வார்த்தை பரிமாற்றங்கள் மட்டுமே..
ஒன்றும் அறியா..
குழந்தைகள் சந்திப்பது போல்..
அன்று நம் சந்திப்பு...
காலம் நம் காதலில் கரைந்தது...
அன்று உணர்த்தியது...
முதல் காதல்..
முதல் சந்திப்பு...
இப்படித்தான் என்று....!
2012-02-06
உன் நினைவில் நான்.....
அன்பே.....
உன்னை மறக்கவும் முடியவில்லை ...
நினைக்காமல் இருக்கவும் முடியவில்லை...
அன்பு வைத்த உன்னை
வெறுக்கவும் தெரியவில்லை...
கண்களை மூடினால் கனவிலும்
கண்களை திறந்தாள் கண் எதிரிலும்
உன் பூமுகம் தான்...
உன்னை நினைக்க தெரிந்த
எனக்கு உன்னை வெறுக்க
தெரியவில்லை...
என்னை நீ எவ்வளவு வெறுத்தாலும்
அதைவிட பலமடங்கு உன்னை நான்
நேசிப்பேன்.....
உன் நினைவில் நான்...
Subscribe to:
Posts (Atom)