2012-03-13
என் விழிகள்....
உன் நினைவோடு வாழும் நான்
இந்த உலகை விட்டு மறையும் நேரத்தில்
என் இறுதி சுவாசக் காற்றை நான் சுவாசிக்கும் வேளை
உன்னை நினைத்துகொண்டே
இறுதி சுவாசைக் காற்றை உள்ளெடுக்கும்
என் உடல்
இறுதி கண்ணீர் துளியை
உனக்காகவே சிந்தும் என் விழிகள்
இறுதி துடிப்பை துடித்து தன் துடிப்பை
நிறுதிகொள்ளும் வேளையில்
இந்த இறுதி துடிப்பில் கூட
உன் பெயரை உச்சரித்திடும் என் இதயம்
பார்வை இழக்கும் நேரத்தில் கூட
உன் முகத்தை தேடிடும் என் விழிகள்.
2012-03-09
2012-03-05
2012-03-03
நேசிக்க மறக்காதே...
கனவுகள் தோறும் நீதான்
என் காதலின் தவிப்பும் நீதான்
காலை பொழுதுகளின் காத்திருப்பும் நீதான்
மாலைப் பொழுதின் ஏக்கமும் நீதான்
என் மனதில் நீளுகின்ற தயக்கமும் நீதான்
முடிவின்றி செல்லுகின்ற என் காதலே நீதான்...
உன்னையே யாசித்துக் கொண்டிருக்கும்
என்னை நேசிக்க மறக்காதே...
எனக்கு சொல்லிப்போனதால்....
நீ எழுதும் மடல்களை படிக்காமலே கிழிக்கிறேன்...
நீ சொல்லவந்ததெல்லாமே...
உன் இதயத்துடிப்புக்கள் எனக்கு சொல்லிப்போனதால்.....
2012-03-02
Subscribe to:
Posts (Atom)