2012-03-13

உனக்காக ........



நீ 
வந்தபின் 
உன்னுடன் பேசியதைவிட 
உனக்காக 
காத்திருக்கும் போது 
உன்னுடன் பேசியதுதான் 
அதிகம்!


நம் இதயங்கள் ........

நம் இதயங்கள் சந்தித்த அந்த 
இரு வினாடியும்
இசைகள் எல்லாம் தோற்று விட்டன
அவ்வளவு இனிமையான கணங்கள்
அதை சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லையடா...


பேனா........

உன் நினைவுகளை எழுதுவதற்காக 
பேனாவை எடுத்தேன் 
பேனாகூட நழுவியது 
உன்னைப் போலவே...


என் விழிகள்....


உன் நினைவோடு வாழும் நான்
இந்த உலகை விட்டு மறையும் நேரத்தில்
என் இறுதி சுவாசக் காற்றை நான் சுவாசிக்கும் வேளை
உன்னை நினைத்துகொண்டே
இறுதி சுவாசைக் காற்றை உள்ளெடுக்கும்
என் உடல்
இறுதி கண்ணீர் துளியை
உனக்காகவே சிந்தும் என் விழிகள்

இறுதி துடிப்பை துடித்து தன் துடிப்பை
நிறுதிகொள்ளும் வேளையில்
இந்த இறுதி துடிப்பில் கூட
உன் பெயரை உச்சரித்திடும் என் இதயம்

பார்வை இழக்கும் நேரத்தில் கூட
உன் முகத்தை தேடிடும் என் விழிகள்.


2012-03-09

உன்னோடு.....



                                                        உன்னோடு நான் இருந்த 
நிமிடங்களை கடிகாரம் 
திரும்ப திரும்ப காட்டுகையில் 
மறக்க முடியவில்லை 
உன்னையும் நீ விட்ட சென்ற 
என் காதலையும் .............


என் காதல் ....




உன்னை மறக்க நான் நினைப்பதில்லை
என்னை மரணம் வந்து அழைக்கும் வரைக்கும் 
நீ தந்த காயங்களோடு உன் நினைவுகளை சுமந்த படி 
என் காதல் என்றும் வாழும்.....


என் கல்லறை மீது...




என் கல்லறை மீது..
உனக்காக நான் எழுதிய காதல்.. 
கவிதைகளாய் விழுந்து கிடக்கட்டும்.! 
அப்போதாவது தெரிந்துகொள்.. 
நான் இறந்த பின்னும் 
உன் மீது நான் கொண்ட காதல்
வாழ்ந்து கொண்டு தான் இருக்கும் என்று..!!


2012-03-05

எப்போதும்....



நீ இருக்கும் இடத்தில் நான் இல்லை என்றாலும்
உன் நினைவில் நானும் என் நினைவில் நீயும்
நம் நினைவில் நம் காதலும் 
விடை கிடைக்கா வாழ்க்கையின் விம்பங்களாக தொடரட்டும் எப்போதும்....


2012-03-03

நேசிக்க மறக்காதே...


கனவுகள் தோறும் நீதான்
என் காதலின் தவிப்பும் நீதான்
காலை பொழுதுகளின் காத்திருப்பும் நீதான்
மாலைப் பொழுதின் ஏக்கமும் நீதான்
என் மனதில் நீளுகின்ற தயக்கமும் நீதான்
முடிவின்றி செல்லுகின்ற என் காதலே நீதான்...

உன்னையே யாசித்துக் கொண்டிருக்கும்
என்னை நேசிக்க மறக்காதே...

எனக்கு சொல்லிப்போனதால்....


நீ எழுதும் மடல்களை படிக்காமலே கிழிக்கிறேன்...
நீ சொல்லவந்ததெல்லாமே...
உன் இதயத்துடிப்புக்கள் எனக்கு சொல்லிப்போனதால்.....

2012-03-02

விடியலில்.......


விடியலில் தொலைத்து
இரவினில் தேடுகிறது ...மனசு
உன்னை அல்ல.........
உன்னில் தொலைந்த என்னை.

என்னவனே............


எப்படி இருக்கிறாய் -என
இனி என்னிடம் கேட்காதே!
என்னவனே
உன்னில் உள்ளவளை…
ஏன் என்னில் விசாரிக்கிறாய்?!!.