2011-12-31

என் இதயமாய் நீ..........

என் இதயத்தின் 
எல்லா அறைகளிலும் 
தேடிவிட்டேன், 
உன்னைக் காணவில்லை. 
வெளியே வந்து பார்த்தால் 
என் இதயமாய் நீ!


சின்ன சின்ன.........

சின்ன சின்ன கனவென்னும் முத்துக்களை 
காதல் என்ற மணிமாலையாக கோர்த்து வைத்தேன் 
நீ என் காதலை உதறிய போது 
சிதறியது மணிமாலையான கனவுகள் மட்டுமல்ல 
உன்னையே உயிரென நினைத்த மனதும் தான் !!!


2011-12-05

என் அருகினில்.........

என் அருகினில்
நீ இல்லாத நாட்களிலும்....

இங்கே
நீ சிதரவிடுச்சென்ற
உன் புன்னகை பூக்கள்...

உனக்கான
என் காத்திருப்புகளையும்
கவிதையாக்குகின்றன..


பிரிவின் வலி........

செடியில் இருந்து...
"பூவை" பறிக்கும் போது...
தெரியவில்லை..!

""பிரிவின் வலி""

உன்னை...
பிரிந்த போதுதான்...
தெரிந்தது..!


2011-12-03

உன் நினைவுகளை......

என் உயிரில் கலந்து 
எந்தன் கவிதையான 
என் உறவே என்றும் 
உனக்காக நான் 
எழுதிடுவேன் 
உன் நினைவுகளை......


2011-12-02

எங்கே போனாய் நீ...??

தேடிப் பாக்க நான் உன்ணை 
தொலைக்கவும் இல்லை! 
விலாசம் கேட்க நான் உன்னை மறக்கவும் இல்லை.! 
நலம் விசாரிக்க காலம் நம்மை பிரிக்கவும் இல்லை.! 
ஆனால் எங்கே போனாய் நீ...??