2012-01-18

உன் முகம் காண ......

உன்னை காணும் முன் காத்திருக்கவில்லை உனக்காக....
ஆனால்_
உன்னை கண்ட பின் காத்திருக்கின்றேன் ஒவ்வொரு நொடியும்......
உன் முகம் காண ....


இது தான் காதலா???..

உன்னை பற்றி நீ இருக்கும் போது 
பேசியது இல்லை ...................... 
உன்னை விட்டு பிரிந்த போது அதிகம் 
உன்னை பற்றி மட்டும் பேசினேன்.......... 
இது தான் காதலா???


நினைவே இல்லை ........

உன்னைப் பார்த்த நாள் நினைவில் இல்லை 

உன்னைப் பார்த்த நாள் முதல் நினைவே இல்லை !!!


அழகாய் பேச .........

அழகாய் பேச 
தமிழில் ஆயிரம் வார்த்தைகள் இருந்தும் 
ஒன்று கூட கிடைக்கவில்லையே 
நீ அருகினில் இருக்கும் போது !!!


2012-01-12

கனவுகளும்.........

கனவுகளும்.........
கவிதைகளும்........
இலகுவானது எனக்கு........
காதலாய்........
நீ என்னுள் நுழைந்த பின்...


கவிதை எழுதுவதால் ..........

கவிதை எழுதுவதால் 
என்ன தான் கிடைகிறது ? 
கேட்கிறாய் நீ ............ 
கவிதை எழுதும் பொழுதெல்லாம்
எனக்கு நீ கிடைக்கிறாய் 
அது போதும் என்கிறேன் நான் ....


காத்திருந்து...........

காத்திருந்து காத்திருந்து
நீயும், நானும் எத்தனையோ முறை
ஏமாந்து போனாலும் 
காத்துக்கிடக்கிறது
நமக்காக காதல்...


2012-01-06

பூக்களில் ...........

பூக்களில் 
ஒளிந்துள்ள 
தேன் துளி போல்... 
எனக்குள் நீ 
காதலாக! 
"கரு வண்டுகளாய்" 
என் கவிதை 
உனை மட்டும் 
சேகரிக்கிறது!