2012-04-22

திருமண வாழ்க்கை ....

காதலில் அதிகம் பேசும் மொழி "மௌனம்"
அந்த மௌனத்திலும்
சில நேரம் "பிரிவு" என்ற புயல் வீசலாம் ..
அந்த புயலையும் தாண்டிச்செல்லும்
உண்மையான காதல்..
திருமண வாழ்க்கை என்ற இன்பத்தில்..


மாயம்...

எங்கே இருந்தாலும்
உன்னை கண்டால் மட்டும் 
திரும்பிப்பார்க்கிறேன்
காதலில் இதுவுமொரு மாயம்தான்..
உன்னை பார்க்கும் அந்த ஒரு நொடிப்பொழுது என் வாழ்வில் 
பல யுகங்களாக தோன்றுவதும் 
மாயத்திலும் மாயம்...


உன் பார்வையால்......

உன்மேல் உள்ள காதலை
சொல்ல வார்த்தைகள் இருந்தும்
மௌனத்தில் தவிக்கிறேன்...
சொல்ல வரும் போதெல்லாம்
ஊமையாகிப்போகிறேன் உன் பார்வையால்


2012-04-20

உன் பார்வை..............

துளித்துளியாய் 
உன்நினைவுகள்! 
பனித்துளியாய்
என்னுள்ளே உறைந்து 
பனிப்போர் புரிகின்றது 
உன் பார்வை வரம் வேண்டி!.......


விரும்புகிறேன்.............

விரும்புகிறேன் என... 
சொல்லிடத்தான் 
விருப்பம்...கண்கள்
உன்னை காணாத போது...
கண்டபொழுதெல்லாம்.. 
வார்த்தைகள் உதட்டில்
ஒட்டிக் கொள்கின்றன...


உன் நினைவு....




என் இதயத்தை மட்டுமல்ல 
என் கனவுகளையும் ,
கற்பனைகளையும் கூட 
நிரப்பிக் கொண்டிருக்கிறது 
உன் நினைவு....


என்னருகில்..........



கண்களுக்கு அருகில் இமைகள் இருந்தாலும் 
கண்களால் இமைகளை பார்க்க முடிவதில்லை 
இருந்தும் கண்கள் இமைகளை வெறுப்பது இல்லை 
என்னருகில் நீ இருந்தும் 
என்னால் உன்னுடன் பேச முடியவில்லை 
இருந்தும் உன்னை என்னால் வெறுக்கவும் முடியாது 
மறக்கவும் முடியாது !!!