2011-11-30

நீ வந்து என்னில் வாழ்ந்த .........

நீ வந்து என்னில் வாழ்ந்த 
நினைவுகள் மறந்து போனால் ....
நான் வந்து இம்மண்ணில் 
வாழ்ந்த நிஜங்கள் அழிந்து போய்விடும்...


உன் நினைவுகள்.....

தனிமையை தேடும்போதெல்லாம் முன்கூட்டியே வந்து இடம் போட்டு அழைக்கிறது உன் நினைவுகள்!




நான் கேட்காமலே...........


நான் கேட்காமலே 
நீ என்னிடம் தந்த 
விலை மதிக்க முடியாத பொருள் உந்தன் அன்பு ....... 
நான் விரும்பாமலே 
நீ எனக்கு தந்திருக்கும் பொருள் 
உந்தன் பிரிவும் கண்ணீரும்...




2011-11-29

நீயும் நானும்......

நீயும் நானும் தொலைவில் இருப்பது பிரிவல்ல ......

நீயும் நானும் காதலை தொலைவில் வைத்திருப்பது தான் பிரிவு ......


நீ விட்டுப்போன..............

நீ விட்டுப்போன நினைவுகளோடு...
உனக்காக காத்திருப்பேன் மறு ஜென்மமும்
ஆனால் நீ நானாக நான் நீயாக..
அப்போதாவது உனக்கு புரியும்,
காத்திருத்தல் எவ்வளவு கடினம் என்று.....!!


உண்மை காதல்.....


உண்மை காதல் உயிர் பிரிந்தாலும் மாறாது ......
என் காதல் பிரிந்தாலும் வாழ்கிறது
அவன் நினைவுகளாக......


அன்பே நீ பேசுவதை......


அன்பே நீ பேசுவதை நிறுத்திக்கொண்டால்
நான் உன்னை நினைப்பதை மறந்துவிடுவேன்
என்று எண்ணி விடாதே !
என் உடல் அசையும் வரை தொடரும்
நான் உன் மீது கொண்ட காதல் !!