2011-12-31

என் இதயமாய் நீ..........

என் இதயத்தின் 
எல்லா அறைகளிலும் 
தேடிவிட்டேன், 
உன்னைக் காணவில்லை. 
வெளியே வந்து பார்த்தால் 
என் இதயமாய் நீ!


சின்ன சின்ன.........

சின்ன சின்ன கனவென்னும் முத்துக்களை 
காதல் என்ற மணிமாலையாக கோர்த்து வைத்தேன் 
நீ என் காதலை உதறிய போது 
சிதறியது மணிமாலையான கனவுகள் மட்டுமல்ல 
உன்னையே உயிரென நினைத்த மனதும் தான் !!!


2011-12-05

என் அருகினில்.........

என் அருகினில்
நீ இல்லாத நாட்களிலும்....

இங்கே
நீ சிதரவிடுச்சென்ற
உன் புன்னகை பூக்கள்...

உனக்கான
என் காத்திருப்புகளையும்
கவிதையாக்குகின்றன..


பிரிவின் வலி........

செடியில் இருந்து...
"பூவை" பறிக்கும் போது...
தெரியவில்லை..!

""பிரிவின் வலி""

உன்னை...
பிரிந்த போதுதான்...
தெரிந்தது..!


2011-12-03

உன் நினைவுகளை......

என் உயிரில் கலந்து 
எந்தன் கவிதையான 
என் உறவே என்றும் 
உனக்காக நான் 
எழுதிடுவேன் 
உன் நினைவுகளை......


2011-12-02

எங்கே போனாய் நீ...??

தேடிப் பாக்க நான் உன்ணை 
தொலைக்கவும் இல்லை! 
விலாசம் கேட்க நான் உன்னை மறக்கவும் இல்லை.! 
நலம் விசாரிக்க காலம் நம்மை பிரிக்கவும் இல்லை.! 
ஆனால் எங்கே போனாய் நீ...??


2011-11-30

நீ வந்து என்னில் வாழ்ந்த .........

நீ வந்து என்னில் வாழ்ந்த 
நினைவுகள் மறந்து போனால் ....
நான் வந்து இம்மண்ணில் 
வாழ்ந்த நிஜங்கள் அழிந்து போய்விடும்...


உன் நினைவுகள்.....

தனிமையை தேடும்போதெல்லாம் முன்கூட்டியே வந்து இடம் போட்டு அழைக்கிறது உன் நினைவுகள்!




நான் கேட்காமலே...........


நான் கேட்காமலே 
நீ என்னிடம் தந்த 
விலை மதிக்க முடியாத பொருள் உந்தன் அன்பு ....... 
நான் விரும்பாமலே 
நீ எனக்கு தந்திருக்கும் பொருள் 
உந்தன் பிரிவும் கண்ணீரும்...




2011-11-29

நீயும் நானும்......

நீயும் நானும் தொலைவில் இருப்பது பிரிவல்ல ......

நீயும் நானும் காதலை தொலைவில் வைத்திருப்பது தான் பிரிவு ......


நீ விட்டுப்போன..............

நீ விட்டுப்போன நினைவுகளோடு...
உனக்காக காத்திருப்பேன் மறு ஜென்மமும்
ஆனால் நீ நானாக நான் நீயாக..
அப்போதாவது உனக்கு புரியும்,
காத்திருத்தல் எவ்வளவு கடினம் என்று.....!!


உண்மை காதல்.....


உண்மை காதல் உயிர் பிரிந்தாலும் மாறாது ......
என் காதல் பிரிந்தாலும் வாழ்கிறது
அவன் நினைவுகளாக......


அன்பே நீ பேசுவதை......


அன்பே நீ பேசுவதை நிறுத்திக்கொண்டால்
நான் உன்னை நினைப்பதை மறந்துவிடுவேன்
என்று எண்ணி விடாதே !
என் உடல் அசையும் வரை தொடரும்
நான் உன் மீது கொண்ட காதல் !!


2011-10-29

நான் உன்னை .....

நான் உன்னை தொலைத்து விட்டேனே
என்று ஒவ்வொரு நொடியும்
வேதனையுடன் தேடி தேடி வந்தேன் ..
ஆனால் உன்னோடு பேசிய
வார்த்தைகளை நினைத்து
சந்தோசம் கொள்கிறேன்.....

உன் ......

உன் நினைவுகளுடன்
கலந்த என்
கண்ணீர் துளிகள் - இன்றும்
நீ எனக்கு அனுப்பிய
உன் நினைவுப்பொருட்களுக்கே
சமர்ப்பணம்...

நீ விலகி .......

நீ விலகி சென்றாலும்
உன் நினைவுகளை
என்னிடம் பத்திரமாக
ஒப்படைத்து விட்டு செல்கிறாய் ,
நீ வரும் வரை
தனியே காத்துக்கிடக்கறேன்
நானும் ,
புதையலாக்கப்பட்ட
உன் நினைவுகளும் . . . !!!

தூக்கதிலாவது....

தூக்கதிலாவது
உன்னை மறக்கலாமென
நினைத்து
கண்மூடி தூங்கி
தூங்குவதாய் நினைக்க மட்டுமே
முடிந்த என்னால்
உன்னை மறக்க ஏனோ முடியவில்லை
தோற்று கொண்டிருக்கிறேன் தினமும்...
நினைவே உனக்கு மறதி
வரும் காலம் எப்போது.............

என் காதலை.....

என் காதலை
நீ மறுத்தாலும்
என்னை
நீ வெறுத்தாலும்
என் கனவை
... ...நீ புதைத்தாலும்
என் உயிரை
நீ எரித்தாலும்
என் காதல்
என்றும் உன்னோடுதான்
உன் உயிரோடுதான்

உன் வழித்தடங்களில்
வாழ்ந்திருப்பேன்
நீ போன பின்பும்......

யுக யுகமாய்.........

யுக யுகமாய் மழையிழந்த
பாலைவனம் போலவும்,
ஒரு ரோஜாச் செடியின்
... ஒற்றைப் பூவுக்காய்
வருடங்களாய்க் காத்திருக்கும்
தோட்டக்காரன் போலவும்,

காத்திருக்கிறேன்!! ♥ ♥

உலக.....

உலக மக்களின்
கண்களுக்கு
எட்டாத அதிசயம்
எதுவென்று
நான் சொல்லவா?
உள்ளத்திற்குள்
இருக்கும் நீ!!!!

கண்ணீரை.....

கண்ணீரைகூட இன்பமாய்
ஏற்றேன்
அவை நீ பரிசாக
கொடுத்துச்சென்றவை
என்பதனால்....!

உன் நினைவுகளால்......

உன் நினைவுகளால்
என் இதயம் நிறைந்த
அந்த அழகான நாட்களை
கவிதையாக எழுதிட
இன்னமும் வார்த்தைகளை
... தேடிக் கொண்டிருக்கிறேன்
வழிந்தோடும் என் கண்ணீருடன்..
நம் நினைவுகளை
கடந்து வந்த
அந்த வசந்த நாட்களை
நான் மறக்கவில்லை
மறக்கவும் முயல்வதில்லை.....!

என்.....

என் இதயத்தை
திருடியது நீ
அதற்காக தனிமை
சிறையில் தண்டனை
பெறுவது நானா ???

யார் வேண்டு.......

யார் வேண்டுமானாலும்
இருக்கட்டும்.....
உன் இதயத்தில்
"காதலியாக "
"மணைவியாக "
ஏன் கடவுளாக கூட ..
ஆனால் நான் மட்டும்
உன் உயிர் துடிப்பாக ....!!!!

உணர்வுகள்......

உணர்வுகள் இருக்கும்வரை
உயிர் கொண்ட காதல்
உடலைவிட்டு நீங்குவதில்லை ,
நான் உன்னை விட்டு
பிரிவதுமில்லை !!!